விடுதலைப் புலிகளை ஊக்குவித்ததாக மட்டக்களப்பில் ஒருவர் கைது!
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார், குறித்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஏறாவூர் – செங்கலடி பகுதியைச் சேர்ந்த 56 வயதான நவனீதன்பிள்ளை மோகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் அவரது சமூக வலைத்தளங்களை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கைதுசெய்யப்பட்ட போது அவரிடம் இருந்து கையடக்க தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed